ஞாயிறு, 24 ஜூன், 2012

நேற்றிரவு இருபத்திமூன்று மணிக்கு

இஃதொன்றும் புதிதில்லை
இருபத்தி மூன்றாம் முறையாக
உன்னைவிட்டு நான்
பிரிந்தேன்

நேற்றிரவு
உரையாடிய சொற்களை
அந்தச் சோடியம் விளக்கின்
மஞ்சள் வெளிச்சத்தில் விட்டுவிட்டு
எதிரெதிர் திசைகளில்
விலகின
நம் நிழல்கள்

யாரிடமாவது
சொல்லியிருப்பாய் நீயும்

அஃதொன்றும் புதிதில்லை
இருபத்தி மூன்றாம் முறையாக
நான் உன்னைச்
சந்தித்தேனென

கருத்துகள் இல்லை: