ஞாயிறு, 9 மார்ச், 2014

நானும்

போட்டது போட்டபடியிருக்கிறது 
வீடு. அழுக்குச்சட்டை.. 
நகர்த்திய நாற்காலி.. 
கசடுதங்கிய தேநீர்க்கோப்பை.. 
அப்புறம் நானும்
--------
எல்லாம் மேகம் 
என்றாகிவிட்டது. 
இப்போதைக்கு
வானம் என்பதில்லை
வானத்தில்
---------
குடை விரிக்கும் 
சடங்கில் சிக்கியிருக்கிறேன் 
மௌனம் பொழியும் 
திரள் மேகங்களோடு 
நீ 

கருத்துகள் இல்லை: