ஞாயிறு, 9 மார்ச், 2014

வாழ்ந்த வீட்டை 
விற்க வேண்டிய அவலத்தால் 
சுருங்கிய அவனை
நில புரோக்கராக 
விரிய வைக்கிறது காலம்
மார்ச் 25 2013
---------
நடந்த கொலைக்குச் 
சாட்சியமாயிருக்கும் 
இக்கோழியிறகு 
காது குடையவும் 
தோதாயிருக்கிறது
--------
இன்றென் 
வீட்டுச் சுவரில் 
தத்தித்தத்திப் போக்குக் காட்டி 
பறந்துசென்ற 
சிட்டுக்குருவியிடம் 
சொல்ல முடியாமற்போன 
சோகத்தைத்தான் 
நாள்முழுதும் 
கொத்திக் கொண்டிருந்தேன் 
மார்ச் 20
----- 

கருத்துகள் இல்லை: