ஞாயிறு, 9 மார்ச், 2014

நேற்று 
பறவையைப் பற்றியதாகவே 
இருந்ததந்தக் கனவு
ஒரு காக்கையைக் கூட 
பார்க்கவில்லை இன்று
பறப்பதைப் பற்றி 
என்ன பேசுவது நான்?!
செப் 14 2013 

--------
நீ வந்து சேர்ந்த 
சில நொடிகளுக்கு முன்தான் 
விடைபெற்றுச் சென்றது 
கடைசி துரோகம்
என்னிடமிருக்கும் அன்பை 
உனக்கும் திறந்து காட்டுகிறேன்
அதை உருட்டிப் பிசைகிறாய் 
இப்படியாக
துரோகங்களால் 
நிகழ்கிறது வாழ்க்கை
 -----
 பேருந்து ஜன்னல் 
கண்ணாடிகளில்
ஆயிரமாயிரமாய்
அரூபக் கண்கள் முளைக்கப்
போதுமானது
இச்சிறு மழை
செப் 12

கருத்துகள் இல்லை: