ஞாயிறு, 9 மார்ச், 2014

ஏணி

சாய்ந்து கிடக்கும் நான் 
ஒரு முக்கோணத்தை 
உண்டாக்கியிருக்கிறேன். 
ஏறிச் செல்லும் நீ, 
எட்டியுதைக்கவும் 
கற்றிருக்கக் கூடும். 
எனினும், 
உச்சியென்பது 
ஏணியால்தான் சாத்தியப்படும் 
உனக்கு.
செப் 9 2013
--------
 
என் அமைதியின் தலையை
 நனைக்கும்
மழைத்துளி 
உன் விரல்நுனியிலிருந்து 
சொட்டுகிறபோதெல்லாம்
ஆர்ப்பரிக்கிறேன் 
கடலலையின் 
கால்கள் பொருத்தி..

கருத்துகள் இல்லை: