ஞாயிறு, 9 மார்ச், 2014

சேகர்

சுழலும் மின்விசிறிக்குக் கீழே
நீயும், நானும் 
சொற்களைப் பிசைந்துகொண்டிருக்கிறோம்
காற்றை அனுபவிக்க 
நமக்கெங்கே தெரியும்?
மே27 2013
----------
 
நான் கோணப்புளியங்காய் 
என்பேன். 
நீயோ கொடுக்காப்புளி 
என்கிறாய். 
என்ன செய்வது? 
நான் கோணப்புளியங்காய் 
சாப்பிட்டுப் பழகியவன். 
நீயோ கொடுக்காப்புளி 
சாப்பிட்டுப் பழகியவன்
மே27
----------
 
வெயிலை, வெயிலே 
என்று கூப்பிட்டு அலுத்துவிட்டது. 
சேகரே எனக் கூப்பிடலாம் இனி. 
சேகர் கோபம்கொள்வானே? 
அவனை இனி 
வெயில் எனக் கூப்பிடலாம்
மே 27
-------
 
அதற்கு முன்னும்
அதற்குப் பின்னும் 
இயல்பாகத்தான் இருந்தேன்
 யாரோ தொட்டுவிட்டதற்காக 
சுருங்கிக் கிடக்கும் 
இதையா வாழ்க்கை 
என்று சொல்வது?
மே 27

கருத்துகள் இல்லை: