ஞாயிறு, 9 மார்ச், 2014

யானையினுடையவைப் போல்
பிரிவின் கண்கள்
மிகச் சிறியவை
கண்ணோரங்களில்
வழிந்து நிற்கும்
நீர்த்தாரைகளோடு தான்
எல்லா யானைகளும்.
செப் 19 2013

வெளிச்சத்தின் மேல் கால்வைத்து
நிழலைக் கறையாகப் படிய வைப்பதன்றி
வேறொன்றும் செய்யத்தெரியாத
நடைபழக்கம் எனக்கு.

செப் 18  

கருத்துகள் இல்லை: