ஞாயிறு, 9 மார்ச், 2014

வாசனை

முன்பு போலில்லை
தடித்துப் பிரம்பாகி
தோல் மென்மையிழந்த விரல்கள்
ஓவியாக்குட்டியின் கண் பொத்துகிறேன் 
மாமா.. கண்டுபிடித்துவிடுகிறாள் நொடிக்குள்
 எப்படி தெரிந்தாய் நானென்று? 
வாசம் வெச்சித்தான் மாமா. 
மாமாக்களுக்கென வாசமிருப்பது 
மாமாக்களுக்குத்தான் தெரிவதில்லை

செப் 19 2013

கருத்துகள் இல்லை: