ஞாயிறு, 9 மார்ச், 2014

ஹைக்கூ

ஒற்றைச் சிறகொடு
கூட்டின் தனிமைப் பகலில்
நிழலும் வெயிலும்.

நடத்துனரின் ஒவ்வொரு விசிலுக்கும்
இமை சுருக்குகிறது 
உறங்கும் குழந்தை

நீதானே 
என் நகக்கண்களையும் 
அழ வைத்தாய்!
 
 என் உள்ளங்கைக் குழிக்குள்
குறுகுறுத்துச் சுழல்கிற
பம்பரத்தின் காலமென
வாய்த்திருத்தாய் 
எனக்கு நீ.
 

கருத்துகள் இல்லை: