ஞாயிறு, 9 மார்ச், 2014

விதுரன்

விதுரன் சிறுகதை

வயிற்றைக் கிள்ளிக் கிள்ளி விளையாடிக்கொண்டிருக்கும் பசியின் தலையைத்; திருகிப் போட்டுவிடலாம் என்றாலும் கண்ணுக்கெட்டிய துhரம் வரையிலும் ஒரு குடிசை கூட தென்படவில்லை தண்டவாளத்தின் இரு பக்கமும் வேலிகாத்தான் முள் புதா; புதராக மண்டிக்கிடக்கின்றன ஏதேனும் ஒரு இரயில் வராமல் பாதையோர முட்கிளைகள் கொஞ்சமும் அசையாது போலும். மதியின் தலைக்கு மேல் கீச்சிட்டுப் பறந்தது ஒற்றைக் கிளி;. அந்தக் கிளிக்குப் பாதைகள் வகுக்கப்படாத வானம் எவ்வளவு பாதுகாப்பனதாக இருக்கிறது? கிளிக்கு மட்டுமில்லை எல்லாப் பறவைகளுக்குமான வாழ்க்கை தானே இது.
கண்ணுக்கெட்டிய துhரத்தில் மெதுமெதுவாக வளைந்திருக்கும் இந்த இரயில் பாதை இன்னும் எவ்வளவு துhரம் செல்லுமோ எந்தெந்த நகரங்களையும் எங்தெந்த மனிதா;களை இணைக்கவும் இந்தத் துண்டவாளங்கள் வேகாத வெயிலில் தகித்துக் கொண்டிருக்கின்றனவோ செருப்பணிந்த கால்களை இடறிக்கொண்டேயிருக்கும் இந்த ஜல்லிக்கற்கள் கானலை உண்டாக்கியபடி இருக்கின்றன இந்த ஒரு மணிநேரமாக ஒரு இரயில் கூட எதிh;படாத பெருத்த ஏமாற்றத்தோடுதான் தண்டவாளங்களுக்கு நடுவே நடந்து கொண்டிருந்தான் மதி. இந்த இரயில் பாதையில்தான் ஏதோவொரு இடத்தில் அவனது மரணம் சம்மணமிட்டு இவனுக்காக உட்காh;ந்திருக்கும்.
நடந்து நடந்து கால்களில் வலியும் குடைச்சலும் பிசாசு போல தொற்றிக் கொண்டுவிட்டது இந்தப் பிசாசையும் துhக்கிக் கொண்டு நடப்பது மிகச் சிரமமாக இருந்தது அவனுக்கு. காலையில் ரவி கடையில் ஒரு டீ குடித்ததோடு சரி. அப்போது கூட செத்துப்போகும் எண்ணம் அவனுக்குள் முளைவிடவில்லை. பசிக்கிறது.
நடக்க நடக்க தலை பெருத்து கால்கள் வளா;ந்து நெடுநெடுவென்று விஸ்வருபமெடுத்து மிருகமாகிவிட்டது இந்தப் பசி. மிகக்கொடூரமான கைகளும் அதில் கூh;கூரான நகங்கள் வளா;ந்த நீளநீளமான பல்லாயிரம் விரல்களும் முளைத்திருக்கின்றன அதற்கு அது ஏதொவொரு இடத்தில் உட்காhந்திருக்கும்; மரணத்தை விட படு பயங்கரமானது.
இம் மிருகம் அவனை வேட்டையாடத் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது அவனைப் பிறாண்டி பிறாண்டி, இரத்தம் சுவைத்து, மரணத்தின் ருசி அறியும் ஜ்வாலையை அவனுக்குள் பற்றவைத்துவிட்டது.
மரணம்.. மரணம் மட்டுமே அவனுக்கு பசி மிருகத்திடமிருந்து பு+ரண விடுதலையைப் பெற்றத் தர முடியும் அவனது வாழ்வில் குறுக்கும், நெடுக்குமாக அலைக்கழிந்து அவனை உலுக்காட்டிய மரணங்கள் யாவுமே துh;மரணங்களாகவே அமைந்து விட்டன.
வேறொருத்தியோடு அப்பாவுக்குத் தொடற்பிருப்பதாகக் யாரோ சொல்லக்கேட்டு மதியின் அம்மா அரளி விதைக்கு தன்னை பலிகொடுத்துக் கொண்டாள். அப்போது மதிக்கு ஏழெட்டு வயதுதான் இருக்கும். அதன் பிறகு அந்த வேறொருத்தியோடு அப்பாவுக்குத் தொடா;பிருந்ததாக எந்த ஆதாரங்களும் மதியின் கண்களுக்கு தென்பட்டதேயில்லை அப்பாவும் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. அம்மா செத்த பிறகு அப்பாவின் சமையல் தான் ருசியான சமையல் வாய்த்தது அரசியிடமிருந்துதான்.
மதிக்கும் அரசிக்கும் கல்யாணமான ஒரே வாரத்தில் பள்ளிக்கூட கிணற்றில் மிதந்தாh; அப்பா. தாத்தா கூட அதே கிணற்றில் முழ்கிச் செத்ததாகத்தான் ஊருக்குள் பேசிக்கொள்வாh;கள.; செல்வம் மாமா லாhpயில் அடிபட்டு செத்தது, எதிh;வ{ட்டு சரண்யாவின் அப்பா மின்சாரம் பாய்ந்து செத்தது, பியு+ன் கந்தசாமி பிளேட்டில் கழுத்தறுத்துக் கொண்டது… எத்தனையெத்தனை துh;மரணங்கள்? அவனுக்குத் தொpந்து இரயிலில் அடிபட்டுச் செத்தவா;கள் யாருமில்லை அதனால்த் தான் தன் சாவை இரயிலுக்கு ஒப்படைத்துவிட்டான்.
துh;மரணங்கள் பல பாh;த்துப் பாh;த்துச் சலித்துவிட்டாலும் கூட அரசியின் மரணம் தான் மதியை ரொம்பவுமே உலுக்கியெடுத்துவிட்டது. அன்பரசி தான் அவள் பெயா.; மதிக்கு மட்டும் அவள் அரசி தான.; எவ்வளவு அழகானவள் அவள். இப்படியொரு அழகியின் முத்தங்களில் குளிக்கும் பாக்கியம் தனக்கு வாய்க்குமென மதி கற்பனை கூட செய்ததில்லை. அடா;த்தியான புருவங்களை உயா;த்திக் காட்டி உதடுகள் சுழித்து இன்ப இம்சைகளால் அவனைக் கரைத்தவள் அரசி. அத்தனை சீக்கிரத்தில் அவனை விட்டுப் பிரிந்துவிட்டாள். பாh;த்துப் பாh;த்து சமைத்து, பக்குவமாய் பறிமாறி நாவின் சுவை நரம்புகளைத் தூண்டிவிட்டவள் அவள். கல்யாணமாகி பிறகு அரசியின் சமையல், மதியின் உடம்பு பு+தம்போல் உப்ப வைத்திருந்தது.
எல்லாம் ஆறே மாதம் தான். மாலையில் வீடு திரும்பிய மதி கதவைத் திறந்ததும் உறைந்து போனான். மின்விசிறியில் தொங்கிக்கொண்டிருந்தாள்;; அரசி;. மூன்று மாத சிசு வயிற்றிலிருக்க இப்படி நாண்டு கொண்டாள். அவள் இப்படி நாண்டுகொண்டு செத்துப் போனதற்கான காரணத்தின் நுனியை மதியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை
அரசியின் நினைவு முதலையின் பிளந்த வாயாகி அவனை கல்விக் கொண்டிருந்தது தனிமையில் விட்டம் பாh;த்து விட்டம் பாh;த்து சு+ன்யமாகிக் கொண்டிருந்தான் உடம்பு ஒற்றடைக்குச்சியாகிட்டது. வீடு வீடாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக பாழாகிவிட்டது. சமைக்க ஆளில்லாமல் பாத்திரங்களை எலிக்குஞ்சுகள் வீடாக்கிக் கொண்டன
தனக்கு சமைக்கத் தொpயாதது குறித்து வருந்தும் மனநிலை ஏதும் உண்டாகவில்லை அவனுக்கு. இந்தத் தனிமையை எப்படிக் கொலை செய்து சாகடிப்பது என்ற கேள்வியும் உதிக்கவில்லை அவனுக்கு. பசி அதிகமாகப் பிறாண்டும்போது ரவி கடையில் போய் நிற்பான். ஒரு டீயோ அல்லது தயிர; சாதமோ வாங்கிக் கொடுத்து பசியைச் சமாதானப்படுத்துவான்
மதிக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவன் அம்மா செத்த ஒரு வாரத்தில் பிறந்தவள்தான் எதிh;வீட்டு சரண்யா. மின்சாரம் தாக்கி விறைத்துக் கிடந்த அப்பாவின் உடலைப் பாh;த்து, உறைந்து போன சரண்யாவை கொஞ்சங் கொஞ்சமாக மதி தான் தேற்றினான். சிறுவயதில் அப்பாவைத் இழந்துவிடுவதின் வலியை அம்மாவைத் இழந்ததன் மூலம் அனுபத்திருந்ததால் மதிக்கு அதன்பிறகு சரண்யாவின் மேல் கரிசனம் வோ;விட்டிருந்தது
சரண்யா வயசுக்கு வந்து சடங்கானபோது அரசி தான் கூடவே இருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுச் செய்தாள.; அரசி நல்ல மனசுக்காரி. பள்ளிக்கூடம் விட்டுத் திரும்பி இரவு ஒன்பது மணிவரையிலும் அரசியோடுதான் ஒட்டிக்கொண்டிருப்பாள் சரண்யா
ஆனால் அரசி போன பிறகு வீட்டிற்கு வருவதை நிறுத்திக் கொண்டுவிட்டாள் சரண்யா. இன்னும் சொல்லப் போனால் சரண்யா மதியின் கண்களில் கூட படுவதில்லை. என்ன காரணமாக இருக்கும் என்பதையும் யு+கிக்க முடியவில்லை அவனால். ஒருவேளை வீட்டில் அரசி பேயாக உலவுவதாக வதந்தி பரவிவிட்டதோ என்றும் கூட யோசிக்க வேண்டிய நிh;பந்தம் ஏற்பட்டது மதிக்கு
டீக்கடை ரவி தான் சொன்னான், “நீ வேற தனியா இருக்க… அந்த சரண்யா வயசுக்கு வந்த பொண்ணு. அதனால தான் அனுப்பாமாட்டேங்குறா அவ அம்மாக்காரி”. ரவி சொன்னதை காதுகளுக்குள் அனுப்ப முடியவில்லை மதிக்கு. நேரடியாக சரண்யாவின் அம்மாவிடமே கேட்டுவிட துணிந்தான.; ரவி சொன்னது போல் நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து சரண்யாவின் அம்மா சொல்லி முடித்தபோது தான் மதிக்குள் மனிதா;கள் மீது வெறுப்பு ஒரு வலைபோல பின்னத் தொடங்கியது முதன்முறையாக.
மனைவியை இழந்தவன் மேல், மற்ற மனிதா;களின் பா;வை கருணையற்றதாகத் தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டபோது, தனக்குள் அரசியின் மேல் அதீத வெறுப்பு உருண்டு செல்வதைக் கவனித்தான் மதி. அரசியின் நினைவுகளோடு நாள்களைக் கடத்திக் கொண்டிருந்தவனுக்கு, அந்த நினைவுகள் பெரும் இம்சையாக மாறிவிட்டது
இன்னமும் ஒரு இரயிலை எதிh;கொள்ள முடியாத சலிப்பும் கால்களைத் தொற்றிக் கொண்டு கூடவே வரும் வலி பிசாசும், வயிற்றைப் பிறாண்டிக் கொண்டிருக்கும் பசி மிருகமும் அவனது நடையின் வேகத்தை வெகுவாகவே குறைத்துவிட்டிருந்தது. அப்படியே உட்காh;ந்து கொள்ளலாம் என்றாலும் இந்தத் தண்டவாளங்கள் அனலாகக் கொதிக்கின்றன கண்ணுக்கெட்டிய தூரத்தில் சில வீடுகள் தென்பட்டன. கோயில் கோபுரம் ஒன்றும் உயரமாகத் தெரிந்தது
போன வாரம் இப்படியான ஒரு கோயிலுக்குத்தான் பெண் பாh;க்க கூட்டிப் போனாh; புரோக்கா; கணேசன். டீக்கடை ரவி தான் மறுமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி புரோக்காpடம் சொல்லி ஏற்பாடு செய்தான். இந்த மூன்று நான்கு மாதமாகத்தான் ரவியோடு இந்த சிநேகம். அதற்கு முன்பு மதிக்கும் ரவிக்கும் எந்தப் பழக்கமும் இருந்ததில்லை
அந்தப் பெண் அடிப்படியென்றும் அழகானவளில்லை. கன்னங்கள் ஒடுங்கி முன் பற்கள் துருத்திக் கொண்டு, பாh;க்கவே சகிக்கவில்லை. கருப்பு வேறு. தாங்க முடியாத தனிமை வெப்பம், பசியின் கோர நகங்களின் பிறாண்டல், சரண்யா அம்மாவின் சந்தேகம் படிந்த பேச்சு யாவும் மதியை சம்மதம் சொல்ல வைத்து விட்டது.
நான்கு நாள்களுக்கு முன் வீட்டுக்கு வந்த புரோக்கா; கணேசன் “பொண்ணு வீட்டுல சம்மதிக்கல தம்பி.. பொண்ணு வீட்டுல உன்னப் பத்தி விசாhpச்சிருக்காங்க. நீதான் ஒம் மொத சம்சாரத்த அடிச்சி தூக்கிக் கட்டிட்டதா ஊருக்குள்ள சொல்லிருக்காங்க. அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க தம்பி” என்றார; புரோக்கர;. போகும்போது அவர; “கோவிச்சிக்காதீங்க வேற புரோக்கா; வச்சி பாh;த்துக்கங்க” என்று சொல்லிவிட்டு சட்டென இடத்தைக் காலி செய்துவிட்டாh;
எல்லாம் சோ;ந்து மதியைத் தண்டவாளங்களுக்கு நடுவே நடக்க வைத்துவிட்டது. எந்த இரயிலும் கூப்பாடு போட்டு எதிரே வரவில்லை இன்னும். சட்டைப்பையில் துழாவிப் பாh;த்தான். கொஞ்சம் நாணயங்களும் சில பணத்தாள்களும் இருந்தன. தண்டவாளத்தை விட்டு விலகி கோயில் கோபுரம் தெரிந்த இடத்தை நோக்கி நடந்தான்
கோயில் அருகிலேயே கூரை வேய்ந்த டீக்கடையொன்றிருந்தது உள்ளே நுழைந்து “சாப்பிட ஏதாச்சும் இருக்குங்களா” என்றான். “காலைல சுட்ட புரோட்டா தான் இருக்குங்க அதுவும் காய்ஞ்சி போய் கெடக்கும்” என்றான் கடைக்காரன். “பரவாயில்ல தாங்க… ரொம்ப பசிக்குது” என்றபடி கையைக் கழுவிக் கொண்டு அங்கிருந்த பெஞ்சில் உட்காh;ந்தான் மதி. ஓh; அலுமினியத் தட்டில் சதுரமாகக் கிழித்த வாழையிலை வைத்து நான்கு புரோட்டாக்களை அடுக்கி மதியிடம் நீட்டி “பிச்சிப் போடுங்க கொழம்பு ஊத்தறேன்” என்றான் கடைக்காரன். புரோட்டாவை பிய்க்கப் பிய்க்க அதன் வாசம் நாசிக்குள் ஏறியது. கடைக்காரன் குழம்பை ஊற்றியதும் புரோட்டாத்துண்டுகளை சில்லென்றிருந்த குழம்பில் புரட்டி பசியைக் கொல்லத் தொடங்கினான். தூரத்தில் கூவியபடி சென்று கொண்டிருந்ததுujjjjjj இரயில்

கருத்துகள் இல்லை: