ஞாயிறு, 9 மார்ச், 2014

தற்கொலை

சருகாகி வானேகும் சிறுபறவை
அதே கணம்
பறவையாகி நிலம் நாடும் 
ஒரு சருகு
அந்நொடி நானோ 
மரம்..மரம்
மே 31 2013
-------
ஒவ்வொரு முத்தமாய் 
பொறுக்கி வீசுகிறாய். 
குளமாகி 
அலையலையாய் 
விரிந்தபடி நான்
மே 30
------ 
 அவ்வளவு 
சுருக்கமான செய்தியாகிவிடும் 
அபாயமிருப்பதால் 
யாருக்கும் காட்டாமல் 
ஒளித்து வைத்திருக்கிறேன் 
எனது தற்கொலையை

கருத்துகள் இல்லை: