ஞாயிறு, 9 மார்ச், 2014

இரை விழுங்கி 
அசைபோடுகிறது குளம். 
கடைசிக் கல்லோடு 
படித்துறையில் நான். 
உனக்கான காத்திருப்பில்,
 இரை வீசும் வித்தையறிந்தேன்
-------
பதினாறு கறுப்பும், 
பதினாறு வெளுப்புமாய்,
 முப்பத்திரு நினைவுகள் நகர்கின்றன 
என்மேல்.
 கவனம்..கவனம்.. 
உன் சிறு நகர்த்தலில், 
மடக்கி வைக்கப்படலாம் 
நான்.
ஜீன் 21 2013 

கருத்துகள் இல்லை: