ஞாயிறு, 9 மார்ச், 2014

யானை

இதுதான் கடைசிமுறை
குறி தப்பினாலும் 
வேறு கல்லை கையிலெடுக்க 
அனுமதியில்லை
வீசுவதன்றி உபாயமெதுவுமில்லை
அதைப் பறக்கவிடுதல்
பிடித்துப்போகிறது இக்கணத்தில்.
செப் 12 

-----

இங்கு மேகமில்லை 
இடியில்லை
மின்னலில்லை
தூறலில்லை
மழையில்லை
வானமுமில்லை.
-----
 
யானை என்பதென்ன? 
பெரிய்ய்ய்ய உருவம். 
கருப்பே அதன் நிறம். 
தும்பிக்கை ஒன்றிருக்கும். 
அசைந்தபடி காதுமடல்கள் இரண்டு. 
தூண் கால்கள் நான்குண்டு. 
வெண் தந்தம் வளைந்திருக்கும்.
வாலொன்று தொங்கும். 
சின்னச்சங்கிலிக்கு கட்டுப்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை: