ஞாயிறு, 9 மார்ச், 2014

அவள் பற்றி

மறுபடியும் கவிதை எழுதும் ஆசையை
புது உண்டியல் போல
எடுத்து வைத்திருக்கிறேன்.
அதன் வாயில் காதலைத் தான்
முதலில் போடலாம் என்றிருக்கிறேன்.
சில்லறைக் காசுகளின் சத்தத்தைப்போல
காதலையும் பெருஞ்சத்ததோடு
அள்ளித் தர நீ வேண்டும்.
நீ யார்? எங்கிருக்கிறாய்?
அல்லது செத்துவிட்டாயா?
எதுவும் தெரியாமல்
இந்தப் பொழுது எரியும் கானகமாகி
என்னை அதற்குள் தள்ளிவிட்டிருக்கிறது.
உண்டியலை உடைத்துவிடலாமென்றாலும் நாணயங்களற்ற
உண்டியலை உடைத்தென் செய்வது?
காதலையும், காதலியையும்
ஒருங்கே பார்த்தவர்கள்
எவரேனும் இங்குண்டா?
இருப்பின் வந்து விசாரித்துவிட்டுப்போங்கள் முகவரியற்ற அவளைப்பற்றி

கருத்துகள் இல்லை: